திருச்சியில் “பெற்றோர்களை கொண்டாடுவோம்” மாநாடு

திருச்சியில் பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் வரும் 7ம் தேதி நடைபெறும் மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2024-02-05 08:28 GMT
மாநாட்டு  பணிகள் 
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் 2- வது மண்டல மாநாடு மற்றும் பள்ளிச் சீரமைப்பு மாநாடு வருகின்ற 7ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. மாநாட்டினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநாட்டுப் பந்தல் அமையவுள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Tags:    

Similar News