சர்க்கரை நோய் வருமுன் காப்போம் -மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Update: 2023-11-10 02:35 GMT

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா  கல்லூரி  சார்பில் சர்க்கரை நோய் வருமுன் காப்போம் விழிப்புணர்வு பேரணி, பவானி கூடுதுறையில் இருந்து தொடங்கி, பவானி புதிய பேருந்து நிலையம், பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பவானி பழைய பேருந்து நிலையம், காளிங்கராயன் பாளையம், லட்சுமி நகர் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் சைக்கிள்களில் பேரணியாக சென்றனர்.  சர்க்கரை நோய் வரும் முன் காப்போம் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக வந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு முன்னதாக நடைபெற்ற பேரணியை  கல்வி நிறுவனத்தின் நிறுவனர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா  கொடியசைத்து துவக்கி வைத்தனர். நடைபெற்ற பேரணியில்  200-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 50க்கும் மேற்பட்ட மாணவிகளும் கலந்துகொண்டு சர்க்கரை நோயை ஒழித்திடுவோம் ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிடுவோம் என கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.
Tags:    

Similar News