நூலகம் திறப்பு விழா

நைனார்குப்பம் நடுநிலைப்பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகத்தின் திறப்பு விழா நடந்தது.

Update: 2024-02-27 08:28 GMT

நைனார்குப்பம் நடுநிலைப்பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகத்தின் திறப்பு விழா நடந்தது. 

இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நைனார்குப்பம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியானது அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக தற்போது பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் சுமார் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் மேசை, நாற்காலி, புத்தகங்கள் வழங்கி பள்ளி கட்டத்திலேயே நுாலகமானது அமைக்கப்பட்டது.

இதனை நேற்று கல்பாக்கம் அணுசக்தித்துறை முதுநிலை விஞ்ஞானி சூரியமூர்த்தி அவர்கள் துவக்கிவைத்தார். இதையடுத்து அப்பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களால் பாட்டுப்போட்டி, பரதநாட்டியம் மற்றும் நடன போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று. பின் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News