அனுமதியில்லாமல் மது விற்ற இருவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-06 15:39 GMT

மது விற்பனை 

குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் அரசு மது பானங்கள் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். வட்டமலை, காலனி மருத்துவமனை அருகே ஆகிய இடங்களில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அறிந்து, நேரில் சென்ற போலீசார் அங்கு மது விற்றுக்கொண்டிருந்த பெருமாள், 51, சசிகுமார், 36, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News