மது விற்றவர் கைது
பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தில் மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-06-22 05:11 GMT
மது விற்றவர் கைது
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தெரணி தெற்கு தெருவை சேர்ந்த தனபால் (வயது 45) என்பவர், தனது வீட்டில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய டுத்து தனபாலை போலீசார் கைது செய்து நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய் யப்பட்டது. தனபால் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.