சேலத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

கூலி உயர்வு கோரி, சேலம் சுமை தூக்கும் தொழிலாளர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 06:12 GMT

ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு கோரி, சேலம் சுமை தூக்கும் தொழிலாளர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் வெங்கடபதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கூலி உயர்வு கேட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News