மகளிர் சுய உதவி குழுவுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
Update: 2024-02-08 11:50 GMT
இன்று (08.02.2024) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில், சங்கராபுரம் சட்டமன்ற உதயசூரியன் முன்னிலையில் நடைபெற்றது.