உள்ளாட்சி தினம் - நெடுங்கூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

Update: 2023-11-02 05:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்கூர் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நெடுங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதாம்பாள் தலைமையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சோபனா கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, ஊராட்சி செயலாளர் அன்புச்செல்வன், தலைமை ஆசிரியர் கென்னடி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்தும், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தும், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News