மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் லாரி டிரைவர் தற்கொலை

சத்தியமங்கலம் அருகே மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-17 07:47 GMT

தற்கொலை செய்து கொண்டவர்

சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் இந்திரா நகர் சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 43 லாரி டிரைவர் இவருடைய மனைவி ஸ்ருதி இவர்களுக்கு இடையே மகன்கள் சஞ்சய் 12 அஜய் 10 அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த நிலை நேற்று முன்தினம் இரவு கனவரிடம் சுருதி மகன்கள் இரண்டு பேருக்கும் பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் செலுத்தாதால் அவர்கள் பள்ளிக்கு செல்ல வில்லை என்று கூறினார்.

இதைக் கேட்டு வேலுச்சாமி மன வேதனை அடைந்த எப்படியாவது பணத்தை கட்ட ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு கதை உள்பக்கமாக தாள் போட்டுக் கொண்டார். அதன் பின்னர் வெகு நேரம் அவர் திறக்காததால் சுருதி தட்டி பார்த்தார். ஆனால் திறக்கவில்லை இதெல்லாம் ஜன்னல் வெளிய எட்டிப் பார்த்தபோது வேலுச்சாமி படுக்கையறையில் மின் விசிறியில் சேலைகள் தூக்கு போட்டு தொங்குவதை தெரிந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுருதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த வேலுச்சாமியை மீட்டனர்.பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சக்தி மூலம் அரசு ஆஸ்பத்திரி சேர்த்துவிட்டு வேலுச்சாமி ஏற்கனவே விழுந்துவிட்டதாக தெரிவித்தனர் சத்தியமான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாது லாரி டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்துள்ளது.

Tags:    

Similar News