லாடபுரத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் உயிரிழப்பு

லாடபுரத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2024-07-01 11:22 GMT

காவல் நிலையம்

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் - சின்னத் துரை (35), லாரி டிரைவர். இவருடைய நண்பரான திருச்சி மாவட்டம் சேர்குடியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் (32) என்பவர் லாடபுரத்திற்கு ஒரு துக்க காரியத் துக்கு நேற்று வந்திருந்தார்.

பின்னர் மாலையில் சின்னத் துரையும், விஜயகுமாரும் மற்றொருவரின் மோட்டார் சைக்கிளில் எசனைக்கு சென்று மது அருந்தி விட்டு மீண்டும் லாடபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்ட, பின்னால் சின்னத்துரை அமர்ந்து இருந்தார். அப்போது நாவலூர் அருகே சென்று கொண் டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னத் துரை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த சின்னத்துரை சம்பவ இடத்தி லேயே இறந்தார்.

இந்த சம்ப வம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News