லாரி டிரைவரின் செல்போன் திருட்டு

சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியில் லாரி டிரைவரின் செல்போன் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-12 02:45 GMT
செல்போன் திருட்டு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது50). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று உத்தமசோழபுரம் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கினார். பின்னர் கண்விழித்து பார்த்த போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடியவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News