வேப்பனகள்ளி அருகே காதல் பிரச்சினை: வடமாநில இளைஞர் தற்கொலை

வேப்பனகள்ளி அருகே காதல் பிரச்சினையால் வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.

Update: 2024-06-06 13:07 GMT

காவல் நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தங்காடிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள தனியார் கோழிப்பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த துளசிராம் பஹாரியா 21 என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சில நாட்களாக அவரது காதலியுடன் பிரச்சனை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கோழி பண்ணையின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த வந்த வேப்பனப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News