மதுரை: 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
மதுரையில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 15:58 GMT
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாத்தூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களை வழங்கி மலர்தூவி வாழ்த்தினார்.இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நளினா ராணி,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் வீரராகவன்,மணிமேகலை ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் உட்பட அரசு அதிகாரிகள், கர்ப்பிணி தாய்மார்கள் பலரும் கலந்து கொண்டனர். சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.