சுசீந்திரம் மேலவாசல் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

சுசீந்திரம் மேலவாசல் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

Update: 2024-06-11 04:16 GMT

சுசீந்திரம் மேலவாசல் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்  மேற்குவாசல் பகுதியில் மேலவாசல் விநாயகர் திருக்கோவிலில் உள்ளது. இந்த கோவில்  திருப்பணிகள் வேலைகளுக்கு திருக்கோவில் நிதி ரூபாய் 1 லட்சமும், உபயதாரர் ஒரு லட்சம் செலவிலும்  கும்பாபிஷேக பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து  நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.      

 குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ்,  ஜோதிஷ் குமார் மற்றும் சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News