மகாலட்சுமி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குடிநீர் வசதி வேண்டி மனு

திருமுருகன் பூண்டி நகராட்சி,மகாலட்சுமி குடியிருப்போர் நல சங்கத்தினர் குடிநீர் வசதி வேண்டி திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-02-08 14:48 GMT

மனு அளித்த மக்கள்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் மகாலஷ்மி குடியிருப்போர் நலசங்கத்தினர் குடிநீர் வசதி வேண்டி நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி நகராட்சி மகாலஷ்மி குடியிருப்போர் நலசங்கத்தை சார்ந்த 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்  4 மற்றும் 5-வது வார்டில் குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையாளரிடம் காலி குடங்களுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுத்தனர்.

மேலும் அப்பகுதியில் போக்குவரத்து தார் சாலை போடாமலே தார் சாலை போட்டதாக கூறியதையும் மனுவாக அளித்தனர்.

Tags:    

Similar News