பராமரிப்பு பணிகள் : விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதை மூடல்

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில்நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்,அந்த வழிதடத்தை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-06-09 06:02 GMT

பைல் படம் 

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதை மற்றும் சாத்தூர் - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 10.06.2024 அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த வழிதடத்தை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
Tags:    

Similar News