சுரண்டையில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடந்த மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாமில்

Update: 2023-12-28 08:32 GMT

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா தலைமை வகித்தாா். சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மகாலட்சுமி, சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி எம்எல்ஏ பழனிநாடாா், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் முகாமைத் தொடக்கிவைத்தனா். முகாமில், மகளிா் உரிமைத் தொகை கோரி 228 மனுக்கள் உள்பட 418 மனுக்கள் பெறப்பட்டன. சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், துணைத் தலைவா் சங்கராதேவி, வருவாய் ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News