சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-09 06:12 GMT

கைது

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அடுத்த அருநூத்துமலை பகுதியை சேர்ந்த 27 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, அந்த பெண்ணின் உறவினரான குமார் (வயது 38) என்பவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளி பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை பலாத்காரம் செய்ததாக தொழிலாளி குமார் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் அர்ஜூனன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News