இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர் கைது

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-04 07:35 GMT

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யபட்டார்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், மீண்டும் வேறோரு இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும், ஏற்கனவே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த இளம் பெண்ணிடம் மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஞானசேகரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News