மறைமலைநகர் கோவிலில் திருடிய நபர் கைது

Update: 2023-12-19 02:01 GMT

ஜோதிபாசு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மறைமலைநகர் என்.ஹெச்.,1 திருவள்ளுவர் சாலையில், பழமையான பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, கோவில் நிர்வாகி பக்தவச்சலம், 65, கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை 5:30 மணிக்கு மீண்டும் கோவிலை திறக்க வந்து போது பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பூஜை பொருட்கள் திருடு போயின.

இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் மறைமலைநகர் போலீசாரில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை மறைமலைநகர் ரயில் நிலையம் அருகில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில்,குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜோதிபாசு, 32, என தெரியவந்தது. மேலும், அவர் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த கோணி மூட்டையை சோதனை செய்ததில், கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் இருந்தன. ஜோதிபாசுவை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Tags:    

Similar News