சுற்றுலா பயணியிடம் திருடிய நபர் கைது

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவரிடம் பணத்தை திருடிய நபர் கைது செய்ய்யப்பட்டார்.

Update: 2024-03-06 01:39 GMT

பைல் படம்

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவரிடம் 200 ரூபாய் பணத்தை திருடியவர் கைது கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் பகுதியில் சேர்ந்தவர் சுகனேசன் மகன் உதயகுமார் வயது 36 இவர் மார்ச் 5 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்திருந்தார்

வேளாங்கண்ணி மாதாவை தரிசித்து விட்டு நடுத்திட்டு பகுதிக்கு வந்த போது அங்கே அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரத்தினம் வயது 30 என்பவர் உதயகுமாரை உரசுவது போல் வந்து அவர் சட்டை பையில் இருந்த 200 ரூபாய் பணத்தை திருடி சென்றார் இது தொடர்பாக உதயகுமார் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரத்தினம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Tags:    

Similar News