குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை

கரூர் அருகே தும்பிவாடியில் குடும்பத் தகராறு காரணமாக மது போதையில் இருக்கும்போது, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-01 14:37 GMT

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தும்பிவாடி புரவிபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலு வயது 40. இவரது மனைவி ரேவதி வயது 35. பாலுவுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் ஒரே ஊரில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், பாலு மது போதையில் இருக்கும்போது, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த பாலுவின் மனைவி ரேவதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த பாலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ,கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.

Tags:    

Similar News