மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
பழவனக்குடி பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.;
Update: 2023-12-01 14:38 GMT
மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பழவனக்குடி கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது வெண்ணாற்றில் இருசக்கர வாகனத்தில் வைத்து, நான்கு மூட்டை மணல் திருடி விற்பனைக்காக எடுத்துச் செல்ல முயன்ற, சத்தியமூர்த்தி வயது 35 என்பவரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நான்கு மணல் மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.