சென்னைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம் - அதிர்ச்சியில் பெற்றோர்

மானாமதுரையில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்

Update: 2024-02-25 12:34 GMT

இளம்பெண் காணவில்லை என்று புகார்

சிவகங்கை அருகே சென்னைக்கு வேலைக்கு வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்ட இளம்பெண் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் சிவசக்தியகோமதி(46). இவரது 25 வயது மகள் வீட்டிலிருந்து சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது தாயார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News