கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் - போலீசார் விசாரணை

இராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் இருந்த ஆணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-21 06:17 GMT
சடலம் மீட்பு 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் தர்மாபுரம் தெரு அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் ஆண் சடலம் கிடப்பதாக இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் பெயரில் போலீசார் சடலமாக கிடந்த நபரை மீட்டு விசாரணை செய்ததில் ஸ்ரீரங்கம்பாளையம் வீராசாமி மகன் ஈஸ்வரன் (45) என்பது தெரியவந்தது ஈஸ்வரனுக்கும் மங்கையர்க்கரசி என்ற நபருக்கும் திருமணம் ஆகி துர்கா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வரன் குடி போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். 

  இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிகிறது நேற்று இரவு அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு தடுப்புச் சுவரில் அமர்ந்து இருந்த பொழுது தவறி விழுந்து உயிர் இழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.   ஈஸ்வரனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குடிபோதையில் தவறி விழுந்தான் உயிரிழந்தாரா அல்லது குடிப்போதையில் ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளி யாரும் கொலை செய்தனர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News