பெண் காவலர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டிகள் !!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2024-03-07 06:39 GMT

மராத்தான் போட்டி

கோவை:மகளிர் தினம் நாடும் முழுவதும் பெண்களுக்கு மரியாதை செலுத்து விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான மரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக தலைமையிடம் துணை ஆணையாளர் சுகாசினி துவங்கி வைத்தார். மரத்தான் ஓட்டத்தில் ஏராளமான ஆயுதப்படை பெண் காவலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.இந்த மாரத்தான் ஓட்டம் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு,அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது.
Tags:    

Similar News