மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

தில்லையாடியில் தெற்கு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-05-26 15:59 GMT

தீ மிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற தெற்கு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஞாயிறு அன்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது தொடர்ந்து நாள்தோறும் அம்மன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி காட்சியளிக்க வீதி உலா நடைபெற்றது இந்நிலையில் இன்று மாலையில் கோவில் முன்பு அம்மன் எழுந்தருளி காட்சி அளிக்க விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் தீ மிதித்து காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர் முன்னதாக காலை முதல் பக்தர்கள் கோவிலில் மாவிளக்கு போட்டு தரிசனம் செய்தனர் தீமிதி திருவிழாவை ஒட்டி பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News