தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு துவக்கம்
பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2023-12-10 11:06 GMT
தற்காப்பு பயிற்சி
பள்ளிபாளையம் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு, தற்காப்பு கலைகள் கற்றுத் தருவதற்காக கலைத்தாய் சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சி வகுப்பிற்கு ஆவரங்காடு கலைஞர் திடலில் உள்ள மைதானத்தில் பயிற்சி அளிப்பதற்காக நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு பயிற்சி வகுப்பிற்கு நேரில் சென்று துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வின் பொழுது நகர திமுகநிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.