மார்த்தாண்டம் அருகே புதக்குள் கொத்தனார் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கொத்தனார் சடலம்

Update: 2024-02-24 05:07 GMT
ஆண் சடலம் 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிர கோடு பகுதியை சேர்ந்தவர் அனு (36). கொத்தனார். இவருக்கு  வித்யா என்ற மனைவியும்,  இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அனுவின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.        

நேற்று முன்தினம் அனு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். ஆனால்  ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலையில் நெடுங்குளம் என்ற குளத்தின் கரையில் புதருக்குள் வாலிபர்  ஒருவர் மர்மமாக இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.        

அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்த நபர் அனு என்பது தெரிய வந்தது. மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்தில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  சாவில் மர்மம்  உள்ளது என்று புகர் எழுந்ததால், பிரேத பரிசோதனைக்கு பிறகு முடிவு தெரிய வரும்  என்று போலீசா தெரிவித்தனர்.

Tags:    

Similar News