சேலத்தில் விழிப்புணர்வு வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்த மேயர்

சேலத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு வாகன ஊர்வலம் மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-12 13:44 GMT
விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த மேயர் 

6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்த விழிப்புணர்வு வாகனம் ஊர்வலம் சேலம் வந்தது. அதன் தொடக்க விழா சேலம் 4 ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு வாகன ஊர்வலத்தை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். இதில் சேலம் சிறுமலர் பள்ளி தலைமை ஆசிரியர் செபஸ்தியான், உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ், உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் மற்றும் ஆசிரிய- ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிலம்ப வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம், சாரதா கலைக்கல்லூரி, ஏ.வி.ஆர். ரவுண்டானா, சோனா கல்லூரி, ரெயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு வாகனம் தர்மபுரிக்கு சென்றது.

Tags:    

Similar News