முன்னேற்பாடுகளை மேயர் ஆணையாளர் ஆய்வு !
நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி பெருந்திருவிழா முன்னிட்டு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன், ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-12 08:55 GMT
ஆய்வு
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 12) விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன், ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.