பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கூட்டம்

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர மன்ற கூட்டம் நடைபெற்றது .

Update: 2023-12-28 15:02 GMT

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், சாதாரண நகர மன்ற கூட்டமானது நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். மேலும் 18 வது வார்டு பெண் கவுன்சிலர் கூறும் பொழுது தனது வார்டுக்குட்பட்ட ஆவரங்காடு பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.மது போதையில் நபர்கள் சுற்றி திரிகிறார்கள். எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அமைப்பதற்கான பள்ளங்கள் மற்றும் சாக்கடைக்கால்வாய் அமைப்பதற்கான சாலைகள் ஆகியவற்றை முறைப்படுத்தி தரவேண்டும் என நான்காவது வார்டு உறுப்பினர் கேட்டுக் கொண்டார். இவ்வாறாக கூட்டம் நடைபெற்றது.. ஏராளமான தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News