சிபிஎம் நிர்வாகிகள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் மஹாலில் நடைபெற்ற சிபிஎம் நிர்வாகிககள் கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Update: 2024-03-29 12:49 GMT

ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் மஹாலில், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நகரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான கோ.நீலமேகம், சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் (பொ) ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வழக்குரைஞர் வீ.கருப்பையா ஆகியோர் அரசியல் நிலவரங்களை விளக்கிப் பேசினர்.

கூட்டத்தில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு, பேராவூரணி நகரக் குழு நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி வெற்றிக்காக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, பொதுமக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, அனைத்து அணிகளும் வெற்றிக்காக பாடுபடுவது" எனத் தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News