மேட்டூரில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-28 11:14 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2000-2001-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்ட முன்னால், இன்னால் ஆசிரியர்களுக்கு முன்னால் மாணவிகள் சால்வை அணிவித்து, பரிசு வழங்கி கௌரவித்தனர். பின்னர் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து முன்னால் மாணவிகள் கூறுகையில் பழைய நண்பர்களை சந்தித்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களோடு பள்ளியில் படித்த இரவுகளை பார்க்கவே முடியாது என்று நினைத்து இருந்த நிலையில் இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது என தெரிவித்தனர். நிகழ்ச்சியின் முடிவில்  50,000 மதிப்புள்ள கபோர்டுகள் முன்னாள் மாணவிகளின் சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News