பள்ளிபாளையம் அருகே மாற்றுக் கட்சியினர் தேமுதிகவில் இணையும் விழா

பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள், பள்ளிபாளையம் ஒன்றிய தேமுதிகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Update: 2024-02-14 06:28 GMT

பள்ளிபாளையம் ஒன்றியம் காடச்சநல்லூர் ஊராட்சியில்,மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் தங்களை,தேமுதிகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சக்திவேல் வரவேற்று பேசினார்.

பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் மணியண்ணண், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தனலட்சுமி, குமாரபாளையம் மாவட்ட நிர்வாகி நாகராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சேகர், மாவட்ட தொழிற்சங்கம் சம்பத் ,பேச்சாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கட்சியில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும் சால்வை அணிவித்தும், உறுப்பினர் படிவம் வழங்கி மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் சிறப்புரையாற்றினார்..

Tags:    

Similar News