சேலத்தில் வியாபாரி தற்கொலை
சேலம் மாவட்டம்,அன்னதானம்பட்டி அருகே திண்பண்ட வியாபாரி கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-09 03:26 GMT
தற்கொலை
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வந்தார். தொழில் விஷயமாக, நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.