மேட்டூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம்,மேட்டூரில் எம் ஜி ஆர் 36வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-24 10:01 GMT

அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுக,வினர்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக நிறுவனரும்,  தமிழக முன்னாள் முதல்வருமான புரட்சித்தலைவர் டாக்டர்  எம்.ஜி.ஆர், மறைந்து இன்றோடு 36 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மேட்டூர் அருகே மேச்சேரி பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்ட எம். ஜி .ஆர், திருவுருவப்படத்திற்கு அதிமுக,வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மேச்சேரி ஒன்றிய செயலாளர் செல்வம் ,சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் ஜெ. குமார் , ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News