திருமயம் அருகே மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார் அமைச்சர்

திருமயம் அருகே மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் வழங்கினார்.

Update: 2024-01-12 15:42 GMT

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

திருமயம் அருகே உள்ள குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்து, திருமயம், குழிபிறை, கோனாபட்டு, நச்சாந்துபட்டி, பனையப்பட்டி ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த 266 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

ஊராட்சித்தலைவர் அழகப்பன் வரவேற்றார். தலைமையாசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News