தூத்துகுடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். 

Update: 2024-01-20 13:45 GMT

முகாமை ஆய்வு செய்த அமைச்சர் 

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.  அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் துவங்கியது.

இதையொட்டி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். மேலும் அவர், ஆர்.சி. பெத்தானியா நடுநிலைப்பள்ளி, மில்லர்புரம் - செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெர்மல் கேம்ப் - மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமை நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடனி்ருந்தனர்.

Tags:    

Similar News