அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

அண்ணாமலை நகரில் ரூ.35.45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்திற்கான பணியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-03-06 09:52 GMT

அடிக்கல் நாட்டு விழா 

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, மேற்கு மாம்பலம், அண்ணாமலை நகர், 3வது தெருவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.35.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய வட்டார துணை ஆணையாளர் ஜெ.பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஸ்ரீதரன், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News