தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி அஞ்சலி

ஈரோடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் திருவுருவப்பட்டத்திற்கு தேமுதிகவினர் மற்றும் அமைச்சர் முத்துசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-28 15:19 GMT

விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதையடுத்து ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு , கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News