வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் சேகர் பாபு

ராயபுரம் உருது பள்ளியில் ரூ.96.17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்

Update: 2024-03-15 04:30 GMT

வகுப்பறை கட்டிடம் திறப்பு 

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட இப்ராஹிம் தெரு, உருது பள்ளியில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.96.17 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறைக் கட்டடங்களை) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் இசட். ஆசாத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News