நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சு.முத்துசாமி

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

Update: 2024-02-16 11:04 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

ஈரோட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி 4152 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இம்முகாமானது ஈரோடு மாவட்டத்தில் கடந்த 18.12.2023 முதல் 06.01.2024 வரை முகாம்கள் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு துறைகள் சார்பில் 14,006 மனுக்கள் பெறப்பட்டு , இதில் 9479 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. 4353 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 174 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்

Tags:    

Similar News