தஞ்சாவூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு தெருமுனைக் கூட்டம்

மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தெருமுனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-03-04 16:28 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை தடுக்க வேண்டும். ஒன்றுபட்ட இந்தியா அமைதி பூங்காவாக தொடர்ந்திட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகரம் சார்பில் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம், நடைபெற்றது. 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் எஸ்.கோஸ்கனி வரவேற்றார். இதில், மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என். குருசாமி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் ஆர். கலைச்செல்வி, மக்கா பள்ளி செயலாளர் ஏ.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.வடிவேலன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News