சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்.

அருமனை அருகே வீட்டின் முன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ கண்ணாடி உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-18 02:54 GMT

டெம்போ கண்ணாடி உடைப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளச்சிப்பாறை கள்ளிமூடு பகுதியை சேர்ந்தவர் பைஜு. இவர் மினி டெம்போ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இரவு நேரங்களில் வீட்டின் அருகில் சாலை ஓரமாக டெம்போவை நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்றும் அவர் அதே இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், டெம்பா கண்ணாடி உடைந்திருப்பதாக பைஜூவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வந்து பார்த்து விட்டு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில் வாகனம் கண்ணாடியை உடைக்க பயன்படுத்திய கல் கிடந்ததாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News