கெங்கவல்லி அருகே திருமணமான இளம்பெண் மாயம்

கெங்கவல்லி அருகே திருமணமான இளம்பெண் மாயம் - போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-13 07:08 GMT

இளம்பெண் மாயம்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா. எம். புதூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகள் சுவாதி(22). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது சுவாதி சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டியில் உள்ள தாத்தா பெரியசாமி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஆத்தூரில் உள்ள அழகு நிலையத்திற்கு வேலைக்கு சென்று வந்த சுவாதி, கடந்த 9ம் தேதி திடீரென மாயமானார். அவரது போனும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. இதையடுத்து அவரது தாத்தா பெரியசாமி, ஆத்தூரில் வேலை செய்யும் அழகு நிலையத்திற்கு சென்று விசாரித்த போது அவர், வேலை முடிந்து சென்று விட்டதாக தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், பெரியசாமி கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News