ஈரோட்டில் காணாமல் போன சிறுவன் மீட்பு

காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

Update: 2023-12-15 05:44 GMT

காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காணாமல்போன சிறுவன் ஈரோட்டில் மீட்பு; காணாமல்போன மொஞ்சனூரை சேர்ந்த சிறுவனை ஈரோடு பஸ்ஸ்டாண்டில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன்40, அனிதா35. தம்பதியினர். இவர்களது இளைய மகன் தீட்சித்10. ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். தீட்சித் நேற்று முன்தினம் அவரது தாத்தா வைத்திருந்த ரூ.500 எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் பஸ்ஏரி ஈரோடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு, சுற்றித்திரிந்த சிறுவனை சந்தேகமடைந்து பேருந்து நடத்துனர் ஒருவர் அங்கிருந்த போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்ததில், திருச்செங்கோடு என பலமணிநேரம் தெரிவித்துள்ளான். எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் அங்குசென்று விசாரணை செய்தபோது, மொஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் யாரிடமும் சொல்லாமல் தாத்தா பீரோவில் வைத்திருந்த ரூ.500பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தது தெரியவந்துள்ளது. எலச்சிபாளையம் எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அச்சிறுவனை மீட்டு, அவனது தந்தையிடம் ஒப்படைத்தனர். உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டதால், மக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News