சிகிச்சையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு எம் எல் ஏ ஆறுதல்

கங்காபுரம் ஊராட்சி அரசினர் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கமடைந்து சிகிச்சையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு எம் எல் ஏ ஆறுதல்.

Update: 2024-01-31 06:42 GMT

 எம் எல் ஏ ஆறுதல் 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் கங்காபுரம் ஊராட்சி அரசினர் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்டதாக 13 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அவர்களை தொகுதி எம்எல்ஏ-வும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சந்தித்து ஆறுதல் கூறி பிஸ்கட், பிரட், பழங்கள் வழங்கினார். உரிய சிகிச்சை விரைந்து அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் வீரபத்திரன், முருகேசன், முரளி, லாவண்யா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன்  இருந்தனர்.
Tags:    

Similar News