அறிவுசார் மையத்துக்கு நாற்காலிகள் வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சந்தைப்பேட்டை பகுதியில் அறிவுசார் மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் நாற்காலிகள் வழங்கினார்.

Update: 2024-03-15 13:35 GMT

அறிவுசார் மையத்துக்கு நாற்காலிகள் வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சந்தைப்பேட்டை பகுதியில் அறிவுசார் மையத்தில் அரசு பொது தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அனைத்து வசதிகளும் கூடிய நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது இங்கு தினமும் 80க்கும் மேற்பட்ட மேற்பட்டவர்களும், சனி மற்றும் ஞாயிறு வகுப்புகளில் 80 க்கும் மேற்பட்டவர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் இன்று அறிவு சார் மையத்திற்கு 40 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், வழக்கறிஞர் சுரேஷ்பாபு, சேன்யோகுமார், ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News