சுகாதார வளாகக் கட்டிடக் கட்டுமானப் பணிகள் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு
சுகாதார வளாகக் கட்டிடக் கட்டுமானப் பணிகள் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு;
By : King 24x7 Website
Update: 2024-02-29 08:18 GMT
சுகாதார வளாகக் கட்டிடக் கட்டுமானப் பணிகள் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு நகராட்சி, 30 வது வார்டு கொல்லப்பட்டியில் நடைபெற்று வரும் சுகாதார வளாக கட்டிட கட்டுமான பணிகளை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சேன்யோ குமார், திருச்செங்கோடு நகர செயலாளர் அசோக்குமார், திருச்செங்கோடு அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, திருச்செங்கோடு நகராட்சி 30 வது வார்டு கவுன்சிலர் தேவராஜ், திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.